Wednesday, July 4, 2012

ஆத்தா ராக்கம்மாள் 

ஆத்தாவின் படங்கள் ஏதும் என் வசம் இல்லை என்பது ஒரு குறை ,
சிவந்த நிறம் வாட்ட சாட்ட மான உடல் வாகு ,நிமிர்த்த பார்வையும் நேர்கொண்ட குணமும் ,எனக்கு ரொம்ப பிடிக்கும் ,நல்ல உழைப்பாளி ,எருமை மாடுகள் வைத்து பால் கறந்து ,துளி கூட தண்ணிர்உற்ராமல் ,பிறருக்கு கொடுப்பது ,வீட்டிற்கு வருபர்களுக்கு ,லோட்டா என்கிற பெரிய டம்ளரில் காப்பி ,மோர் கொடுப்பது வழக்கம் ,இரக்க மனசு .நேர்மை ,சூது வாது வஞ்சனை இல்லாமை , 

நான்  வளர்ந்து பெரிய வனாக ஆனபிறகு ,ஆத்தாவிற்கு வயதான்போழுது ,அவர்கள் கன்னத்தை ,அதில் உள்ள சுருக்கங்களை விரல்களால் தடவி பார்ர்ப்பது உண்டு ,ஏன் ஆத்தா உனக்குமட்டும்  இத்தனை சுருக்கம் ,பட்டு போலிருக்கும் ,மிக வயதானால் ,நன்றாக வளமை உடன் உள்ளவர்கள் ,வயதாக வயதாக ,முகம் சுருங்கி விடும் ,
அதன் பிறகு அவர்கள் தங்கை அய் வெகு நாட்ட்களுக்பிறகு பார்த்தேன் .அவர்களுக்கும் முகம் அப்படித்தான்  இருந்தது .

No comments:

Post a Comment